காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கும் எதிரான வழக்கு விசாரணை 29ம் திகதி முதல்…

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்கினை எதிர்வரும் 29ம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்மானித்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கென்வில் ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.