காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை…

கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் இன்று(24) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.