காய்ந்த பூசணியாய் வளம் வரும் வாசு

தம்மை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில்  விமர்சித்தமையை காட்டிலும் தாம் அவரை விமர்சித்தமையானது சிறந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதிப்பகுதியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவை சிங்களத்தில் கெட்டவார்த்தையால் வாசுதேவ திட்டினார். அதனை சகல தரப்பினரும் விமர்சித்தனர்.

இதனையடுத்து இது தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போது ரணில் விக்கிரமசிங்க, வாசுதேவ பயனற்றவர் என்ற அடிப்படையில் காய்ந்த பூசணிக்காய் என்று அவரை குறிப்பிட்டிருந்தார்.

இதனை கோடிட்டே வாசுதேவ, ரணில் தம்மை திட்டியதை காட்டிலும் தாம் அவரை சிறந்த சொல்லாலேயே திட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.