நாட்டில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60Km வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், சபரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75mm வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் குறித்த திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.