காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

நாட்டில் நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூ​டிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மணிக்கு 60km வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்கரையோரங்களில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானஜலை அவதான நிலையம் கோரியுள்ளது.