காலநிலையில் மாற்றம்…

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில நாட்களில்; ஓரளவு மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.