காலநிலையில் மாற்றம்…

மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக தணியக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றி விசேடமாக மத்திய, வடமத்திய மற்றும் தென்மாகாணங்களில் ஓரளவுக்கு கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெற்கு ,மேற்கு ,மத்திய ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமாக காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.