(FASTNEWS| COLOMBO) – கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று(08) காலை காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த காலநிலை எதிர்வரும் ஆறு மணித்தியாலங்களுக்கும் நீடிக்கும் எனவும் இதற்கமைய பிற்பகல் 3.30 வரை சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்குமெனவும் குறித்த குறித்த திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.