காலி மே தினக்கூட்டத்திற்கு சென்றோர் மீது தாக்குதல்

காலியில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டத்துக்கு ரயில்மூலம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி குறித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.

எனினும் இந்த தாக்குதல் எந்த இடத்தில் இடம்பெற்றது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை