நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும், சீரானதும் வரட்சியானதுமான வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
எனினும் கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, வடமேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது