காவற்துறையினர் மீது தாக்குதல்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சீதுவ வெளியேறல் பகுதியில் காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட சிலரை சோதனை செய்ய முற்பட்ட வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காவற்துறையினரின் உந்துருளிகளை அபகரித்து அவற்றின்  ஊடாக அவர்கள் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.