குருணாகலை – மாஸ்பொத்த பகுதியில் காவற்துறை வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
குருணாகலை – புத்தளம் வீதியில் வெலலங்கே – மாஸ்பொத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருந்தது.
அவர்களை நேற்று(15) இரவு கைது செய்ய சென்ற வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.