(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
அண்மையில் கோட்டாபயவுக்கு ஆதரவாக பிரச்சார மேடைகளில் ஏறும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு சத்தம் எழுப்பி வெளியேற்றப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கான கௌரவம் சரியான முறையில் வழங்கப்படாமை போன்ற காரணங்களினால் பல உறுப்பினர்கள் விரக்கி அடைந்துள்ளனர்.
இதேவேளை, கோட்டாபயவுடன் இணைந்து பல சுதந்திர உறுப்பினர்கள் இன்றையதினம் சந்திரிக்கா தலைமையிலான அணியுடன் இணைந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹிந்த தலைமையிலான பெரமுன கட்சியின் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.