கிபிகல பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை…

போத்தல, கிபிகல பிரதேசத்தில் தாயும்(46) மகளும்(25) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை உயிரிழந்த பெண்ணின் கணவனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, குறித்த சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.