நீர்குழாய்க்கான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – பலாமரச்சந்தி முதல் ஒருகொடவத்தை வரையான ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு இன்று(08) இரவு 9 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று(08) இரவு 9 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது.
இந்நிலையில், மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.