கிரிக்கட் எனும் உலகைத் தவிர எதுவும் தெரியாது – ஹர்பஜன்

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து இருப்பது குறித்து ஹர்பஜன்சிங் கருத்து தெரிவிக்கையில்;

‘எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. மீண்டும் இந்திய ஒருநாள் அணியின் உடையை அணிய கிடைத்து இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வேன். இதனை எனக்கு அளிக்கப்பட்ட மற்றொரு சவாலாக நினைக்கிறேன்.

ஜிம்பாப்வே பயணத்தை மற்றொரு பரீட்சையாக கருதுகிறேன். இந்த பரீட்சையில் வெற்றி பெற கடினமாக உழைப்பேன். என்னால் முடிந்த அளவு அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்றார்.