கிரிக்கெட் தேர்தலை ஒத்திவைக்க ஐசிசி இணக்கம்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் நேற்று(20) ஐசிசி இனது தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிஷர்ட்சன் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாதம் 07ம் திகதி இடம்பெறவிருந்த கிரிக்கெட் நிறுவனத் தேர்தலானது, பெப்ரவரி 21ம் திகதி வரையில் ஒத்திவைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.