கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி…

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களை மீள திறக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மொரிசனின் கெடுபிடியான கொள்கை தளர்த்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, கிறிஸ்மஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களை மீளத்திறப்பதற்கு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுமதியளித்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.