கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் விசாரணை செய்ய புதிய குழு நியமனம்…

அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை குழுவிலிருந்து அங்கத்தவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு பதிலாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.