கிளைபோசேட் இரசாயனக் கிருமி நாசினியின் பயன்பாடு குறித்து ஆராய விசேட குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று(27) கூடிய அமைச்சரவை மாநாட்டில் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் அங்கத்தவராக பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டதோடு, ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறியப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-Rishma