கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இன்று(17) முதல் பலகலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலின்படி நாளை(18) வெள்ளிக்கிழமை 12.00 மணிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் எனவும், அனைத்து விடுதி மாணவர்களும் தமது விடுதிகளின் திறப்புகளை குறித்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பலகலைக்கழக நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.
(rizmira)