கீதா குமாரசிங்கவிடம் விசாரணைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதன்போது விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தின் படி பிற நாட்டு பிரஜைக்கு இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.