குக்குலே கங்கை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதனை அண்மித்துள்ள தாழ்நில மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதன் கிளை ஆறுகள் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே அதனை அண்மித்து வாழும் தாழ்நில மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.