பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 2018ம் ஆண்டு ஐ.பி.எல். இருபதுக்கு – 20 போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிரதிதித்துவப்படுத்தும் சன்ரைஸஸ் அணியின் வெற்றிடத்திற்கு இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவினை உட்சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma