இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தமை குறித்து உண்மைத்தன்மை இல்லை என பலவிதமான கதைகள் பரவிய வருகின்றமை யாவரும் அறிந்ததொன்றே.
இதுகுறித்து மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையினை வெளியிடாததால் குசல் ஊக்கமருந்து பாவித்தமை குறித்து நம்பமுடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
