குசல் மென்டிசுக்கு சர்வதேச மைதானத்தில் இருந்து ஓய்வு வழங்கப்பட வேண்டும்..

இளம் தலைமுறை வீரரான குசல் மென்டிசுக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சற்று ஓய்வு வழங்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அவர் திறமையான வீரர் என்றும் எந்தவொரு வீரருக்கும் இவ்வாறான நிலை ஒன்று உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளளார்.

இந்நாட்களில் இடம்பெறும் இங்கிலாந்து அணியுடனான தொடரில், நான்காவது ஒருநாள் போட்டியில் குசல் மென்டிஸ் 05 புள்ளிகள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்த நிலையிலேயே குறித்த பதிவினை மஹேல பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.