குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் ஜனவரி 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று வெள்ளியன்று பிறப்பித்துள்ளது.

குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை அவருக்கு இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

(riz)