குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்னம் கடந்த வருடம் இலங்கைக்கு வந்து, கேகாலை அக்குருவெல்லவில் உள்ள அவரது தயார் வீட்டில் தங்கியிருந்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரட்னம் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.