வெல்கமவின் அரசியலுக்கு ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தான் ஜனாதிபதி தேர்தலிற்காக வேட்புமனு தாக்கல் செய்து சுயாதீனமாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் தான் வெறியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினால் தான் குறுகிய காலத்திற்கு ஓய்வு பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.