குறிப்பிட்ட கால எல்லையில் உரிய தேர்தல்களை நடாத்த அமைச்சரவை அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு இணக்கம் வெளியிடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேஷன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் தொடர்பிலான குழப்ப நிலைகளுக்கு எதிர்வரும் வாரத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்திருந்தார்.