(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்காள விரிகுடாவின் குறைந்தளவிலான காற்றழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்குள் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையான கடலோர பகுதிகளில் மழை அல்லது பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.