குற்றச்சாட்டின் ஆதாரங்களின் பிரதிகளை வழங்குமாறு அர்ஜுன் மகேந்திரன் CID இடம் கோரிக்கை…

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களின் பிரதிகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சர்வதேச பொலிஸாரின் சிங்கப்பூர் கிளையின் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரிய ஜயசுந்தர இது பற்றிய தகவல்களை இன்று(24) நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கின் முதல் பிரதிவாதியாக அர்ஜூன் மகேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.