ஒரு நாள் போட்டிகள் ஆறில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனுஷ்க குணதிலக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அண்மையில் இடம் பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறி நடந்து கொண்டமை தொடர்பில் தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 ஒரு நாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்த சம்பளத்தில் 20% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அணியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளல், போட்டிகளுக்கு இடை நடுவே விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், மதுபானம் அருந்துதல், போட்டிகளுக்காக உரிய நேரத்தில் சமூகமளிக்காமை, உடற் தகுதி சோதனையில் கலந்து கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)