சட்டவிரோதமாக பெற்ற ஜீப் ஒன்றுக்கு, பிறிதொரு வாகனத்தின் பதிவுச் சான்றிதழை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(12) விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இந்த வழக்கின்போது; பிரதிவாதி தரப்பு மற்றும் முறைப்பாட்டாளர் தரப்பும் சமரசம் செய்து கொள்ள இணங்கியுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கிஹான் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
எனவே பிரதிவாதிக்கு எதிரான குற்றப் பத்திரிகையை இரத்துச் செய்ய அனுமதிக்குமாறு அவர் கோரினார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கை இன்றுடன் நிறைவு செய்து சந்தேக நபரையும் விடுவித்துள்ளார்.
#reeshmaa..