குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு(01) கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அடையாளந் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.