கூட்டு எதிர்க் கட்சியினால் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான நடைபவனி தொடர்பில், மக்கள் அறிவூட்டும் நிகழ்ச்சிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் அறிவூட்டல் நிகழ்ச்சிகள் தொகுதிவாரியாக நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள 51 உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் குறித்த இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.