கூட்டு எதிர்க்கட்சியினரின் பொதுக்கூட்டம் இன்று(08) இரத்தினபுரியில் இடம் பெறவுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்;
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம் பெறவுள்ளது.
அத்துடன் குறித்த இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்வார் என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.