நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சிலாபம் முன்னேஸ்வரம் பத்தரகாளியம்மன் ஆலயத்தில் தேங்காய் உடைக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான தமது செயற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் ரஞ்சித் சொய்சா மேலும் குறிப்பிட்டுள்ளார்.