பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டுஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று(01) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாளிமார் சம்மேனளம், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவுகளை மக்களிற்குத் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் தான் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.