UPDATE – கேகாலை, புலத்கோபிட்டிய மண்சரிவு – மூவரின் சடலங்கள் மீட்பு

இதுவரையில் மூவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேகாலையில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை

கேகாலை, புலத்கோபிட்டியவில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கேகாலை, புலத்கோபிட்டிய, கலுபானவத்த எனும் இடத்தில் குறித்த இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண் சரிவினால் ஆறு பெருந்தோட்ட லயன் வீடுகள் முழுமயாக சேதமடைந்துள்ளன.

மண் சரிவு அனர்த்தத்தில் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பஉறுப்பினர்களுமே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.