தமது ஆட்சிக்காலத்தில் யுத்தம் நிறைவு செய்யப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த சூழ்நிலையில் கேக் துண்டு போன்று ஒப்படைக்கப்பட்ட நாட்டை அதை சாப்பிடத் தெரியாத அரசாங்கம் குழப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சியின் போது கட்டியெழுப்பப்பட்ட நாடு இன்று வீழ்ச்சியடைந்திருப்தாக தெரிவித்துள்ள அவர் பல வெளிநாட்டு முதலீடுகளையும் இவ்வரசு இழந்துள்ளதாகவும் தனது புதிய அலுவலகத்தில் வைத்து இன்று தெரிவித்திருந்ததோடு சீனாவுடனான உறவுகளைக் குழப்ப வேண்டாம் என அப்போதே தாம் தெரிவித்திருந்ததாகவும் தமக்கு முந்தைய ஆட்சியாளர்கள் செய்த வெளிநாட்டு ஒப்பந்தங்களைத் தாம் ஒரு போதும் கை விட வில்லையெனவும் இவ்வரசாங்கம் அவ்விடயத்திலும் தவறிழைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கேக் சாப்பிடத் தெரியாத அரசாங்கம்: மஹிந்த