(FASTNEWS|COLOMBO) கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.