(FASTNEWS-COLOMBO) வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசதங்களில் நேற்று(05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம – மிதிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 12 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை – பெரலுஹின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிலோ 850 கேளர கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மிதிகம , ராகமை , அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.