(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கு இடையில் நேற்று(24) ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.