கைது செய்யப்பட்ட வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்திற்கு பின்னால் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் இம்மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று(21) கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த இந்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.