முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்து உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் தன்னை கைது செய்ய எடுக்கும் முயற்சிக்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு கூறி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.