கொக்கேன் போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொட-ஒலியமுல்ல பிரதேசத்தில் கொக்கேன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி வலய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 208 கிராம் கொக்கேன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.