பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள “கொண்டையா” என்றழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கம்பஹா நீதவான், இன்று புதன்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய கொண்டையா, மஹர சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையா, இரண்டு வழக்குகளில் இருந்து தலா 50, 000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இன்று (21) காலை விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.