(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (01) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,879 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் இதுவரை 3071 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது 180 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.