கொரோனா : இலங்கை, சீனா ஒன்றிணைந்து செயற்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரில் தொடர்ந்தும் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியகற்றி, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட விமானச் சேவை ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில், இலங்கையும் சீனாவும் ஒன்றிணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.